Saturday, January 18, 2014

கேட்பரி சாக்லெட்?


1,400 ஏக்கரில் கேட்பரி சாக்லெட் நிறுவனம் ஆந்திராவில் 1000 கோடி மதிப்பீலான சாக்லெட் உற்பத்தி நிறுவனத்தை நிறுவ திட்டமிட்டுள்ளது. 2020 க்குள் வேலை வாய்ப்பை இது அதிகப்படுத்தும் என்பதையும் கேட்பரி நிறுவன தலைவர் ரவிந்தீர சுமரெட்டி கூறியுள்ளார்.

ஸ்ரீசிட்டி சென்னைக்கு 55 கி.மீ தொலைவில் இருக்கும் மிகப்பெரிய சிறப்பு பொருளாதார பிரிவுக்குள் இருக்கும் இடம்.



இந்தியாவின் மிகப்பெரிய சாக்லெட் ( உணவு) தயாரிப்பு நிறுவனமாக இது செயல்ப்பட்டு இருக்கும் நிறுவனத்தின் அடுத்த ஒரு வளர்ச்சியாக இருக்கும். மேலும், இன்றைய தேவையை மனதில் வைத்து மிகப்பெரிய, பிரம்மாண்ட தொழிற்சாலையாக அமையும்.

ஆனால் இதுபோன்ற நிறுவனங்கள் இந்தியாவில் வாழும் குறைந்த விழுக்காடுகளை மக்களை நோக்கியே செயல்பட்டு வருகின்றது. 1,400 ஏக்கர் நிலம் என்பது மிகப்பெரிய விவாசாய நிலமாக இருந்திருக்கும்.



M.S. Swaminathan ஆய்வு நிறுவனத்தின் விழா ஒன்றில் பேசிய நாட்டின் ஜனாதிபதி, ஆய்வாளர்கள் உட்பட அனைவருமே உணவு பாதுகாப்பு மசோதாவை பற்றிய விளக்கங்களையும், இந்தியாவின் உணவு தேவையை சமன் செய்ய விவாசாயத்தின் தேவையையும் கூறினார்கள்.


நிலங்கள் எல்லாம் பெரிய நிறுவனங்களுக்கும், குறைந்த விழுக்காடு அதாவது வறுமை கோட்டுக்கு பல மைல் தூரம் தள்ளி நிற்பவர்களின் தேவையை நோக்கி அரசாங்கம் செயல்பட்டு வருகின்றன.

உணவு பாதுகாப்பு மசோதா எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு நிலங்களும், உணவு உறபத்தியும் நம் நாட்டிற்கு தேவை.


இந்த தொழிற்சாலை 1000 கோடி முதலீடு செய்கிறது, நாளை அங்கிருந்து வெளியேற்றபடும் கழிவுகளால் நீருக்கு நிச்சயம் பாதிப்பு ஏற்படும். இந்தியாவில் பல சிறிய ஆறுகள், நதிகள் மழைக்காலம் தவிர மற்ற சமயத்தில் வெறும் நிலங்களாக மட்டுமே இருந்து வருகிறது.


இதை எல்லாம் நாம் கண்டுக்கொள்ளாமல் இன்றையை தேவைகளையும், லாபம் தரும் விழுக்காடு மக்கள் பின்னாலேயே செல்கிறோம். 2020 க்குள் இளைஞர்கள் பலருக்கு அங்கு பல வேலைகள் கிடைக்கலாம், ஆனால் விவாசாயிகளை நாம் இன்னும் கீழே இறக்கிவிட்டு நாம் படிகளில் ஏறுவது போல இருக்கும்.

1 comment:

  1. River beds kooda ipo niraya missing janani...we have to do something frm our side

    ReplyDelete